வெண்பாவினங்கள்



இது புதுசு... வெண்பாவில் எழுத முடியல... வெண்டளை ரொம்ப கடினம்னு நினைக்கறவங்க வெண்பாவினம் எழுதலாம்.


வெண்டளையில்லாத தளைகளும் பயின்று வந்து வெண்பா இலக்கணத்தில் வந்தால் அது ஏதாவது ஒரு வெண்பா இனமாக கருதப்படும்.


சில வெண்பாவினங்கள் பார்ப்போம் 

குறள் வெண்செந்துறை


குறளைப்போல் இரண்டடி பெற்று, வெண்டளை அல்லாத பிற தளைகள் பயின்று வரும். சீரகள் இரண்டடியிலும் சமமாக வரும்


எ.கா:




என்னப்பா எல்லாமே சொல்லிக் கொடுக்கோனும்?

என்னப்பு யாப்புன்னு பயமுறுத் துற




குறட்டாழிசை


குறளைப்போல் இரண்டடி பெற்று ஈற்றடி முதலடியைவிட குறைந்த சீர்கள் கொண்டு வரும். வெண்டளையாகவே வந்தாலும், 7 சீர்களுக்கு மேல் உள்ள குறள்கள் குறட்டாழிசையே

எ.கா:




என்னப்பா எல்லாமே சொல்லிக் கொடுக்கோனும்? தெரியாதுல்ல

என்னப்பு யாப்புன்னு பயமுறுத் துற




வெண்டாழிசை

சிந்தியல் வெண்பாவில் தளை பிழன்றாலோ, சீர்கள் அதிகம் வந்தாலோ அது வெண்டாழிசை




என்னப்பா எல்லாமே சொன்னாதான் தெரியுமா?
என்னப்பு யாப்புன்னு சொல்லி பயமுறுத்த?
என்னா தளையென்றுக் கூறு




வெண்டுறை

நாலடிக்கு மிகுந்து பனிரெண்டு அடிக்கு மிகாமல், 4 மற்றும் மிகுந்த சீர்களால் ஆகி, பிற தளைகள் பயின்று வந்தால் வெண்டுறை.


எ.கா:


பாலையில் தான்தனியாய்ச் சென்று இயேசுவும்;
காலையில் தேவனுக்கு வேண்டி; -வேலை,
திருசித்தம் சீராய் உலகிலே செய்து
திருவுரு யேசு சிறந்து


இந்த பாவில் வேண்டி - வேலை தளை தட்டுகிறது. ஆதலால் இது வெண்டுறை என்பர்.







வெளிவிருத்தம்





4 சீர்களுக்கு மேலாக வெண்டளைகள் மிக்கதாய் பயின்று வரும். கடைச்சீர் தனிச்சொல்லாக, எல்லா கடைச்சீரும் ஒரே சொல்லாய் வருவது சிறப்பு


எ.கா:

உயிரீந் துமரித்து, எம்மையே காத்தார் - இயேசு

உயிர்த்தெழுந் தார்அவரே கேள்மின் உயிர்த்தார் -இயேசு

உயிர்கொடுத்து எந்தனை, மன்னித்தார் விண்ணார் - இயேசு




இதில் எல்லாமே வெண்டளைகள். இயேசு என்ற தனிச்சொல் எல்லா அடிகளிலும் கடைச்சொல்லாய் வருவதை காண்க.

No comments:

Post a Comment