நேரிசை வெண்பா

முதல் இரண்டு பதிவுகளை கண்ட பின்பு இதை படிக்கவும்.


விளம்மாச்சீர் மற்றுமது காய்ச்சீர் வருமே
வளவெண் டளைகள் பயின்று -உளயியற்
சீர்விளமுன் நேராக, மாமுன் நிரையாக
சீர்மூன் றதுகாய்முன் நேர்

இது இரு விகற்ப நேரிசை வெண்பா.


இந்த வெண்பா அடியேன் இயற்றியது.

யாப்பருங்கலங்காரிகை என்ற ஒரு இலக்கண நூல் உண்டு. அதில் உள்ள நேரிசை வெண்பா குறித்த செய்யுளைக் காணலாமா?


ஈரடி வெண்பாக் குறள்குறட் பாவிரண் டாயிடைக்கட்
சீரிய வான்றனிச் சொல்லடி மூஉய்ச்செப்ப லோசைகுன்றா
தோரிரண் டாயு மொருவிகற் பாயும் வருவதுண்டேல்
நேரிசை யாகு நெரிசுரி பூங்குழ னேரிழையே.


பொருள்:
இரண்டடி வெண்பா குறள்; இரண்டி குறட்பாவின் நடுவே செப்பலோசை குன்றாது ஒருசீர், முதற் குறளிற்க்கு விகற்பமாயும் வந்தால் நேரிசை வெண்பா

இப்பொது காண்போமா என் வெண்பாவை பிரித்து

விளம்மாச்சீர் மற்றுமது காய்ச்சீர் வருமே
வளவெண் டளைகள் பயின்று -உளயியற்
சீர்விளமுன் நேராக, மாமுன் நிரையாக
சீர்மூன் றதுகாய்முன் நேர்


விள ..... பயின்று - குறள் வெண்பா
சீர்.... நேர் - குறள் வெண்பா
உளயியற் - தனிச்சொல்

விள - வள - உள  - ஒரே விகற்பம் காண்க

சீர் - சீர் மற்றொரு விகற்பம் காண்க...




விளம்மாச்சீர் மற்றுமது காய்ச்சீர் வருமே
வளவெண் டளைகள் பயின்று -உளயியற்
சீர்விளமுன் நேராக, மாமுன் நிரையாக
சீர்மூன் றதுகாய்முன் நேர்

இரு விகற்பத்தால் வந்ததால் இது இரு விகற்ப நேரிசை வெண்பா.

அடியேன் எழுதிய இயேசு நாதர் வெண்பாவில் இருந்து ஒரு எ-கா

உயிரீந்(து) உவந்து, உயிர்தந்தார் வென்று;
உயிர்த்தெழுந்தார் சாவிட் டுயர்ந்து -உயிரீந்(து)
உயிர்த்தோர் இலையே உயிருள்ளோர் தன்னில்,
உயிர்த்தவர் யேசு உயர்


- இயேசு நாதர் வெண்பா

உயிரீந் ..... டுயர்ந்து - குறள் வெண்பா
உயிர்த்தோர்.... உயர் - குறள் வெண்பா
உயிரீந்(து) - தனிச்சொல்

உயி - உயி - உயி -உயி - உயி 


ஒரு விகற்பத்தால் ஆனது.

இது ஒரு விகற்ப நேரிசை வெண்பா.

மற்றுமோர் எடுத்துக் காட்டு.

தக்காருந் தக்கவ ரல்லாருந் தந்நீர்மை
யெக்காலுங் குன்ற லிலாரவரக்காரம்
யாவரே தின்னினுங் கையாதாங் கைக்குமாந்
தேவரே தின்னினும் வேம்பு 


பொருள்:

அக்காரம் எனும் இனிப்பு மிகத்தாழ்ந்தவர் தின்றாலும் இன்சுவை உடையதாவது போல தக்கார் எப்பொழுதும் நற்குணமுடையவராவர். 

வேம்பு தேவர்கள் தின்றாலும் கசப்பையே உடையதாவது போல, தக்கவரல்லாத அயோக்கியர் எப்போதும் துர்க்குணங்களையே யுடையவராவார்


நீங்களும் வெண்பா எழுதித் தான் பாருங்களேன்! 



No comments:

Post a Comment